Thursday, 16th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக வரும் 7-ம் தேதி டெல்லியில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கு ராகுல் காந்தி ஏற்பாடு செய்துள்ளார்.
மாநிலங்களில் உள்ள எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்தால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும்? என இந்த கூட்டத்தின்போது விவாதிக்கப்படும் என தெரிகிறது. அவர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் வரும் 9-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.
அதன் பின்னர் ஒவ்வொரு மாநிலத்திலும் எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை காங்கிரஸ் சந்திக்கும்? என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு படிப்படியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.